உதவிக்காக வேண்டல்
(பாடகர் தலைவர்க்கு: நினைவு கூர்தலுக்காகத் தாவீது பாடியது)
(திபா 40:13-17)

1கடவுளே! என்னை விடுவித்தருளும்;

ஆண்டவரே! எனக்கு உதவி செய்ய

விரைந்து வாரும்!

2என் உயிரைப்

பறிக்கத் தேடுவோர் அனைவரும்

வெட்கமும் குழப்பமும் அடைவராக!

எனக்குத் தீங்கு வருவதை விரும்புவோர்

வெட்கத்தால் தலைகுனிந்து

பின்னிட்டுத் திரும்புவராக!

3என்னைப் பார்த்து, ‛ஆ! ஆ!’ என்று

ஏளனம் செய்வோர்

பெருங்கலக்கமுற்றுப் பின்னிடுவராக!

4உம்மை நாடித் தேடும் அனைவரும்

உம்மில் மகிழ்ந்து களிகூர்வராக!

நீர் அருளும் மீட்பில் நாட்டம் கொள்வோர்

‛கடவுள் மாட்சி மிக்கவர்’ என்று

எப்போதும் சொல்வர்.

5நான் சிறுமையுற்றவன், ஏழை;

கடவுளே! என்னிடம் விரைந்து வாரும்;

நீரே எனக்குத் துணை;

என்னை விடுவிப்பவர்;

என் கடவுளே! காலந்தாழ்த்தாதேயும்.