ஆண்டவரே நம் ஆயர்
(தாவீதின் புகழ்ப்பா)

1ஆண்டவரே என் ஆயர்;

எனக்கேதும் குறையில்லை.

2பசும்புல் வெளிமீது எனை அவர்

இளைப்பாறச் செய்வார்;

அமைதியான நீர்நிலைகளுக்கு

எனை அழைத்துச் செல்வார்.

3அவர் எனக்குப் புத்துயிர் அளிப்பார்;

தம் பெயர்க்கேற்ப

எனை நீதிவழி நடத்திடுவார்;

4மேலும், சாவின் இருள்சூழ் பள்ளத்தாக்கில்

நான் நடக்க நேர்ந்தாலும்,

நீர் என்னோடு இருப்பதால்

எத்தீங்கிற்கும் அஞ்சிடேன்;

உம் கோலும் நெடுங்கழியும்

என்னைத் தேற்றும்.

5என்னுடைய எதிரிகளின் கண் முன்னே

எனக்கொரு விருந்தினை

ஏற்பாடு செய்கின்றீர்;

என் தலையில் நறுமணத் தைலம் பூசுகின்றீர்;

எனது பாத்திரம் நிரம்பி வழிகின்றது.

6உண்மையாகவே, என் வாழ்நாள் எல்லாம்

உம் அருள் நலமும் பேரன்பும்

என்னைப் புடைசூழ்ந்து வரும்;

நானும் ஆண்டவரின் இல்லத்தில்
நெடுநாள் வாழ்ந்திருப்பேன்.


23:2 திவெ 7:17; 24:1; 1 கொரி 10:26.