கடவுள் தேர்ந்து கொண்ட அரசர்

1வேற்றினத்தார் சீறி எழுவதேன்?

மக்களினங்கள் வீணாகச்

சூழ்ச்சி செய்வதேன்?

2ஆண்டவருக்கும் அவர்தம் அருள் பொழிவு

பெற்றவர்க்கும் எதிராகப்

பூவுலகின் அரசர்கள்

அணிவகுத்து நிற்கின்றார்கள்;

ஆள்வோர் ஒன்றுகூடிச்

சதிசெய்கின்றார்கள்;

3‛அவர்கள் பூட்டிய தளைகளைத்

தகர்ப்போம்;

அவர்கள் வைத்த கண்ணிகளை

நம்மிடமிருந்து அறுத்தெறிவோம்’
என்கின்றார்கள்.

4விண்ணுலகில் வீற்றிருப்பவர்

எள்ளி நகைக்கின்றார்;

என் தலைவர் அவர்களைப் பார்த்து

ஏளனம் செய்கின்றார்.

5அவர் சினமுற்று

அவர்களை மிரட்டுகின்றார்;

கடுஞ்சினத்தால் அவர்களைக்

கலங்கடிக்கின்றார்;

6‛என் திருமலையாகிய சீயோனில்

நானே என் அரசரைத்

திருநிலைப்படுத்தினேன்.’

7ஆண்டவர் ஆணையிட்டு உரைத்ததை

நான் அறிவிக்கின்றேன்;

‛நீர் என் மைந்தர்; இன்று நான்

உம்மைப் பெற்றெடுத்தேன்.

8நீர் விரும்புவதை என்னிடம் கேளும்;

பிற நாடுகளை உமக்கு

உரிமைச் சொத்தாக்குவேன்;

பூவுலகை அதன் கடையெல்லைவரை

உமக்கு உடைமையாக்குவேன்.

9இருப்புக் கோலால்

நீர் அவர்களைத் தாக்குவீர்;

குயவன் கலத்தைப்போல

அவர்களை நொறுக்குவீர்.’

10ஆகவே, மன்னர்களே,

விவேகமாக நடந்துகொள்ளுங்கள்;

பூவுலகை ஆள்வோரே,

எச்சரிக்கையாயிருங்கள்.

11அச்சத்தோடு ஆண்டவரை

வழிபடுங்கள்; நடுநடுங்குங்கள்!

அவர்முன் அகமகிழுங்கள்!

12அவர் சினங்கொள்ளாதபடியும்

நீங்கள் வழியில் அழியாதபடியும்

அவரது காலடியை முத்தமிடுங்கள்;

இல்லையேல், அவரது சினம்

விரைவில் பற்றியெரியும்;

அவரிடம் அடைக்கலம் புகுவோர்

அனைவரும் பேறுபெற்றோர்.


2:1-2 திப 4:25-26. 2:7 திப 13:33; எபி 1:5; 5:5. 2:9 திவெ 2:26-27; 12:5; 19:15.