உதவிக்காக மன்றாடல்
(தாவீதின் அறப்பாடல்; குகையில் இருந்தபொழுது மன்றாடியது)

1ஆண்டவரை நோக்கி அபயக்குரல்

எழுப்புகின்றேன்; உரத்த குரலில்

ஆண்டவரின் இரக்கத்திற்காக

வேண்டுகின்றேன்.

2என் மனக்குறைகளை

அவர் முன்னிலையில் கொட்டுகின்றேன்;

அவர் திருமுன்னே என் இன்னலை

எடுத்துரைக்கின்றேன்;

3என் மனம் சோர்வுற்றிருந்தது;

நான் செல்லும் வழியை

அவர் அறிந்தேயிருக்கின்றார்;

நான் செல்லும் வழியில் அவர்கள்

எனக்குக் கண்ணி வைத்துள்ளார்கள்.

4வலப்புறம் கவனித்துப் பார்க்கின்றேன்;

என்னைக் கவனிப்பார் எவருமிலர்;

எனக்குப் புகலிடம் இல்லாமற் போயிற்று;

என் நலத்தில் அக்கறை கொள்வார்

எவருமிலர்.

5ஆண்டவரே! உம்மை நோக்கிக்

கதறுகின்றேன்;

‛நீரே என் அடைக்கலம்;

உயிர் வாழ்வோர் நாட்டில்

நீரே என் பங்கு’.

6என் வேண்டுதலைக் கவனித்துக் கேளும்;

ஏனெனில், நான் மிகவும்

தாழ்த்தப்பட்டுள்ளேன்;

என்னைத் துன்புறுத்துவோரிடமிருந்து

எனக்கு விடுதலை அளித்தருளும்;

ஏனெனில், அவர்கள் என்னைவிட

வலிமைமிக்கோர்.

7சிறையினின்று என்னை விடுவித்தருளும்;

உமது பெயருக்கு

நான் நன்றி செலுத்துவேன்;

நீதிமான்கள் என்னைச்

சூழ்ந்து நிற்பார்கள்;

ஏனெனில், நீர் எனக்குப்

பெரும் நன்மை செய்கின்றீர்.


142 தலைப்பு: 1 சாமு 22:1; 24:3.