இஸ்ரயேலின் எதிரிகளை முன்னிட்டு மன்றாடியது
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)

1‟என் இளமை முதற்கொண்டே

என்னைப் பெரிதும்

துன்புறுத்தினார்கள்” –

இஸ்ரயேல் மக்கள் சொல்வார்களாக!

2‟என் இளமை முதற்கொண்டே

என்னைப் பெரிதும்

துன்புறுத்தினார்கள்;

எனினும், அவர்கள்

என்மீது வெற்றி பெறவில்லை.

3உழவர் என் முதுகின்மீது உழுது

நீண்ட படைச்சால்களை உண்டாக்கினர்.”

4ஆண்டவர் நீதியுள்ளவர்; எனவே,

பொல்லார் கட்டிய கயிறுகளை

அவர் அறுத்தெறிந்தார்.

5சீயோனைப் பகைக்கும் அனைவரும்

அவமானப்பட்டுப் புறமுதுகிடுவராக!

6கூரைமேல் முளைக்கும் புல்லுக்கு

அவர்கள் ஒப்பாவார்கள்;

வளருமுன் அது உலர்ந்துபோகும்.

7அதை அறுப்போரின் கைக்கு,

ஒரு பிடி கூடக் கிடைக்காது;

அரிகளைச் சேர்த்தால்

ஒரு சுமைகூடத் தேறாது.

8வழிப்போக்கரும் அவர்களைப் பார்த்து,

‛ஆண்டவர் உங்களுக்கு ஆசி

வழங்குவாராக!’ என்றோ

‛ஆண்டவரின் பெயரால்

ஆசி வழங்குகிறோம்’ என்றோ சொல்லார்.