1தெய்வீக சபையில் கடவுள்
எழுந்தருளியிருக்கின்றார்;
தெய்வங்களிடையே அவர்
நீதித்தீர்ப்பு வழங்குகின்றார்.
2‛எவ்வளவு காலம் நீங்கள்
நேர்மையற்ற தீர்ப்பு வழங்குவீர்கள்?
எவ்வளவு காலம் பொல்லாருக்குச்
சலுகை காட்டுவீர்கள்? (சேலா)
3எளியோர்க்கும் திக்கற்றவர்க்கும்
நீதி வழங்குங்கள்;
சிறுமையுற்றோர்க்கும் ஏழைகட்கும்
நியாயம் வழங்குங்கள்!
4எளியோரையும் வறியோரையும்
விடுவியுங்கள்!
பொல்லாரின் பிடியினின்று
அவர்களுக்கு விடுதலை அளியுங்கள்!
5உங்களுக்கு அறிவுமில்லை;
உணர்வுமில்லை;
நீங்கள் இருளில் நடக்கின்றீர்கள்;
பூவுலகின் அடித்தளங்கள் அனைத்துமே
அசைந்துவிட்டன.
6‛நீங்கள் தெய்வங்கள்;
நீங்கள் எல்லாரும் உன்னதரின் புதல்வர்கள்.✠
7ஆயினும், நீங்களும்
மனிதர்போன்று மடிவீர்கள்;
தலைவர்களுள் ஒருவர் போல
வீழ்வீர்கள்’ என்றேன்.
8கடவுளே, உலகில் எழுந்தருளும்,
அதில் நீதியை நிலைநாட்டும்;
ஏனெனில், எல்லா நாட்டினரும்
உமக்கே சொந்தம்.