பழைய ஏற்பாடு
1ஆண்டவரே! என் உள்ளத்தில்
இறுமாப்பு இல்லை!
என் பார்வையில் செருக்கு இல்லை;
எனக்கு மிஞ்சின அரிய, பெரிய,
செயல்களில் நான் ஈடுபடுவதில்லை.
2மாறாக, என் நெஞ்சம்
நிறைவும் அமைதியும் கொண்டுள்ளது;
தாய்மடி தவழும் குழந்தையென
என் நெஞ்சம் என்னகத்தே
அமைதியாயுள்ளது.
3இஸ்ரயேலே! இப்போதும் எப்போதும்
ஆண்டவரையே நம்பியிரு!