இறைமக்களைப் பாதுகாப்பவர்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்)

1ஆண்டவர்மீது நம்பிக்கை

வைத்துள்ளோர்

சீயோன் மலைபோல் என்றும்

அசையாது இருப்பர்.

2எருசலேமைச் சுற்றிலும்

மலைகள் இருப்பதுபோல,

ஆண்டவர் இப்போதும் எப்போதும்

தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார்.

3நல்லார்க்கென ஒதுக்கப்பட்ட நாட்டில்

பொல்லாரின் ஆட்சி நிலைக்காது;

இல்லையெனில் நல்லாரும்

பொல்லாதது செய்ய நேரிடும்.

4ஆண்டவரே! நல்லவர்களுக்கும்

நேரிய இதயமுள்ளவர்களுக்கும்

நீர் நன்மை செய்தருளும்.

5கோணல் வழிநோக்கித் திரும்புவோரை

ஆண்டவர் தீயவரோடு சேர்த்து

இழுத்துச் செல்வார்.

இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!