1ஆண்டவர்மீது நம்பிக்கை
வைத்துள்ளோர்
சீயோன் மலைபோல் என்றும்
அசையாது இருப்பர்.
2எருசலேமைச் சுற்றிலும்
மலைகள் இருப்பதுபோல,
ஆண்டவர் இப்போதும் எப்போதும்
தம் மக்களைச் சுற்றிலும் இருப்பார்.
3நல்லார்க்கென ஒதுக்கப்பட்ட நாட்டில்
பொல்லாரின் ஆட்சி நிலைக்காது;
இல்லையெனில் நல்லாரும்
பொல்லாதது செய்ய நேரிடும்.
4ஆண்டவரே! நல்லவர்களுக்கும்
நேரிய இதயமுள்ளவர்களுக்கும்
நீர் நன்மை செய்தருளும்.
5கோணல் வழிநோக்கித் திரும்புவோரை
ஆண்டவர் தீயவரோடு சேர்த்து
இழுத்துச் செல்வார்.
இஸ்ரயேலுக்கு நலம் உண்டாவதாக!