ஆண்டவரும் அவர் தேர்ந்து கொண்ட அரசரும்
(தாவீதின் புகழ்ப்பா)

1ஆண்டவர் என் தலைவரிடம்,

‛நான் உம் பகைவரை

உமக்குப் கால்மணையாக்கும்வரை

நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்’

என்று உரைத்தார்.

2வலிமைமிகு உமது செங்கோலை

ஆண்டவர் சீயோனிலிருந்து

ஒங்கச் செய்வார்;

உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!

3நீர் உமது படைக்குத்

தலைமை தாங்கும் நாளில்

தூய கோலத்துடன் உம் மக்கள்

தம்மை உவந்தளிப்பர்;

வைகறை கருவுயிர்த்த பனியைப்போல

உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.

4‛மெல்கிசெதேக்கின் முறைப்படி

நீர் என்றென்றும் குருவே’ என்று

ஆண்டவர் ஆணையிட்டுச்

சொன்னார்; அவர் தம் மனத்தை

மாற்றிக் கொள்ளார்.

5என் தலைவர்

உம் வலப்பக்கத்தில் உள்ளார்;

தம் சினத்தின் நாளில்

மன்னர்களை நொறுக்குவார்.

6வேற்று நாடுகளுக்கு அவர் தீர்ப்பளித்து

அவற்றைப் பிணத்தால் நிரப்புவார்;

பாருலகெங்கும் தலைவர்களை

அவர் நொறுக்குவார்.

7வழியில் உள்ள நீரோடையிலிருந்து

அவர் பருகுவார்;

ஆகவே அவர் தலைநிமிர்ந்து நிற்பார்.


110:1 மத் 22:44; மாற் 12:36; லூக் 20:42-43; திப 2:34-35; 1 கொரி 15:25; எபே 1:20-22; கொலோ 3:1; எபி 1:13; 8:1; 10:12-13. 110:4 எபி 5:6; 6:20; 7:17,21.