“இறைவனாகிய ஆண்டவரே,
மன்னித்தருளும்;
உம்மைக் கெஞ்சி மன்றாடுகிறேன்;
யாக்கோபு எப்படி
நிலைநிற்கப் போகிறான்?
அவன் மிகச் சிறியவன் அல்லவா!”
என்றேன்.
3ஆண்டவரும் இதைக் குறித்து
மனம் மாறினார்;
‘இது நிகழாது,’ என்றார்
தலைவராகிய ஆண்டவர்.”
4தலைவராகிய ஆண்டவர்
எனக்குக் காட்டிய காட்சி இதுவே:
“தலைவராகிய ஆண்டவர்
தண்டனைத் தீர்ப்பாக
நெருப்பு மழையை வருவித்தார்;
அந்த நெருப்பு
ஆழ்கடலை வற்றச் செய்து
நிலத்தையும் விழுங்கிக்
கொண்டிருந்தது.
5நான்,‘தலைவராகிய ஆண்டவரே,
இதை நிறுத்தியருளும்;
உம்மைக் கெஞ்சி மன்றாடுகின்றேன்;
யாக்கோபு எப்படி
நிலைநிற்கப் போகின்றான்?
அவன் மிகச் சிறியவன் அல்லவா!’
என்றேன்.
6ஆண்டவரும் இதைக் குறித்து
மனம் மாறினார்;
‘இதுவும் நிகழாது,’ என்றார்
தலைவராகிய ஆண்டவர்.”
7ஆண்டவர் எனக்குக் காட்டிய
காட்சி இதுவே:
“தூக்கு நூல் குண்டின் துணைகொண்டு
கட்டப்பட்ட ஒரு மதில் அருகில்
அவர் நின்று கொண்டிருந்தார்.
அவர் கையில் ஒரு
தூக்கு நூல் குண்டு இருந்தது.
8‘ஆமோஸ்!
நீ காண்பதென்ன?’ என்று
ஆண்டவர் என்னைப் பார்த்துக் கேட்டார்.
நான், ‘அது தூக்கு
நூல் குண்டு’ என்றேன்.
தலைவர் தொடர்ந்து சொன்னார்:
‘தூக்கு நூல் குண்டை
என் மக்களாகிய இஸ்ரயேலின் நடுவில்
தொங்கவிடப் போகிறேன்;
இனி நான் அவர்கள் நடுவே
ஒருபோதும் கடந்து
செல்லப்போவதில்லை’.
9ஈசாக்கின் உயர்ந்த இடங்கள்
பாழாக்கப்படும்;
இஸ்ரயேலின் புனித இடங்கள்
பாலைவெளி ஆக்கப்படும்;
எரொபவாம் வீட்டாருக்கு எதிராக
நான் வாளெடுத்து வருவேன்.”
16எனவே, இப்பொழுது
ஆண்டவரின் வாக்கைக் கேள்:
‘இஸ்ரயேலுக்கு எதிராக
இறைவாக்கு உரைக்காதே;
ஈசாக்கின் வீட்டாருக்கு எதிராகப்
பேசாதே’ என்று நீ சொல்கிறாய்!
17ஆண்டவர் இவ்வாறு கூறுகிறார்:
“உன் மனைவி நகரில்
விலைமகளாய் இருப்பாள்;
உன் புதல்வர் புதல்வியர்
வாளால் மடிவர்;
உன் நிலபுலம்
பங்கு போட்டுக் கொள்ளப்படும்,
நீயோ புனிதமற்ற நாட்டிலே
மாண்டு போவாய்;
இஸ்ரயேல் தன் நாட்டுக்கு வெளியே
அடிமையாகக் கொண்டு போகப்படும்.”