நன்றிப் பா

1அந்நாளில் நீ இவ்வாறு சொல்வாய்:

‟ஆண்வடரே, நான் உமக்கு

நன்றி சொல்வேன்;

நீர் என்மேல் சினமடைந்திருந்தீர்;

இப்பொழுதோ,

உம் சினம் தணிந்து விட்டது;

நீர் எனக்கு ஆறுதலும் அளித்துள்ளீர்.

2இறைவன் என் மீட்பர்,

அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன்,

நான் அஞ்சமாட்டேன்;

ஆண்டவரே என் ஆற்றல்,

அவரையே பாடுவேன்,

என் மீட்பும் அவரே.”

3மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள்

அகமகிழ்வோடு தண்ணீர்

முகந்து கொள்வீர்கள்.

4அந்நாளில் நீங்கள் சொல்வதாவது:

ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;

அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்;

மக்களினங்களிடையே

அவர்செயல்களை அறிவியுங்கள்;

அவர் திருப்பெயர் உயர்க எனப்

பறைசாற்றுங்கள்.

5ஆண்டவருக்குப் புகழ்ப்பா

அமைத்துப் பாடுங்கள்;

ஏனெனில் அவர் மாட்சியுறும்

செயல்களைப் புரிந்துள்ளார்;

அனைத்துலகும் இதை

அறிந்துகொள்வதாக.

6சீயோனில் குடியிருப்போரே!

ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்;

இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே

சிறந்து விளங்குகின்றார்.


12:2 விப 15:2; திபா 118:14.