1அந்நாளில் நீ இவ்வாறு சொல்வாய்:
‟ஆண்வடரே, நான் உமக்கு
நன்றி சொல்வேன்;
நீர் என்மேல் சினமடைந்திருந்தீர்;
இப்பொழுதோ,
உம் சினம் தணிந்து விட்டது;
நீர் எனக்கு ஆறுதலும் அளித்துள்ளீர்.
2இறைவன் என் மீட்பர்,
அவர்மேல் நம்பிக்கை வைக்கிறேன்,
நான் அஞ்சமாட்டேன்;
ஆண்டவரே என் ஆற்றல்,
அவரையே பாடுவேன்,
என் மீட்பும் அவரே.”
3மீட்பருளும் ஊற்றுகளிலிருந்து நீங்கள்
அகமகிழ்வோடு தண்ணீர்
முகந்து கொள்வீர்கள்.
4அந்நாளில் நீங்கள் சொல்வதாவது:
ஆண்டவருக்கு நன்றி செலுத்துங்கள்;
அவர் திருப்பெயரைப் போற்றுங்கள்;
மக்களினங்களிடையே
அவர்செயல்களை அறிவியுங்கள்;
அவர் திருப்பெயர் உயர்க எனப்
பறைசாற்றுங்கள்.
5ஆண்டவருக்குப் புகழ்ப்பா
அமைத்துப் பாடுங்கள்;
ஏனெனில் அவர் மாட்சியுறும்
செயல்களைப் புரிந்துள்ளார்;
அனைத்துலகும் இதை
அறிந்துகொள்வதாக.
6சீயோனில் குடியிருப்போரே!
ஆர்ப்பரிந்து அக்களியுங்கள்;
இஸ்ரயேலின் தூயவர் உங்களிடையே
சிறந்து விளங்குகின்றார்.