1கடவுளே! என் கூக்குரலைக்
கேளும்; என்
விண்ணப்பத்திற்குச் செவிசாயும்.
2பூவுலகின் கடைமுனையினின்று
உம்மைக் கூப்பிடுகின்றேன்;
என் உள்ளம் சோர்வுற்றிருக்கின்றது;
உயரமான குன்றுக்கு
என்னை அழைத்துச் செல்லும்.
3ஏனெனில் நீரே என் புகலிடம்;
எதிரியின்முன் வலிமையான கோட்டை.
4நான் உமது கூடாரத்தில்
எந்நேரமும் தங்கியிருப்பேன்;
உமது இறக்கைகளின் பாதுகாப்பில்
தஞ்சம் புகுவேன். (சேலா)
5ஏனெனில், கடவுளே!
நான் செய்த பொருத்தனைகளை
நீர் அறிவீர்;
உமது பெயருக்கு அஞ்சுவோர்க்குரிய
உடைமையை எனக்குத் தந்தீர்.
6அரசரைப் பல்லாண்டு வாழச் செய்யும்;
அவரது ஆயுள்
தலைமுறை தலைமுறையாக நீடிக்கட்டும்!
7கடவுள் முன்னிலையில் அவர்
என்றென்றும் வீற்றிருப்பாராக!
பேரன்போடும் உண்மையோடும்
அவரைக் காத்தருளும்!
8உமது பெயரை என்றென்றும்
புகழ்ந்து பாடுவேன்;
நாள்தோறும் என் பொருத்தனைகளை
நிறைவேற்றுவேன்.