18குருக்களின் மரபில் வேற்றினப் பெண்களை மணந்தவர்களாகக் கண்டு பிடிக்கப்பட்டவர்கள்: ஏசுவா வழிமரபில் யோசதாக்கின் மகனான ஏசுவா, அவர் சகோதரரின் வழிமரபில், மாசேயா, எலியேசர், யாரிபு, கெதலியா ஆகியோர்.
19அவர்கள் தம் மனைவியரை அனுப்பி விட வாக்களித்தனர்; தங்கள் குற்றநீக்கப் பலியாக ஒரு கிடாயைச் செலுத்தினர்.
20இம்மேயின் வழிமரபில், அனானி, செபதியா ஆகியோர்.
21ஆரிம் வழிமரபில் மாசேயா, எலியா, செமாயா, எகியேல், உசியா ஆகியோர்.
22பஸ்கூர் வழிமரபில் எலியேனாய், மாசேயா, இஸ்மயேல், நத்தனியேல், யோசபாது, எலாசா ஆகியோர்.
23லேவியரில், யோசபாது, சிமயி, கெலித்தா என்ற கேலாயா, பெத்தகியா, யூதா, எலியேசர் ஆகியோர்.
24பாடகரில் எலியாகிபு; வாயிற்காவலரில், சல்லூம், தேலம், ஊரி, ஆகியோர்.
25மற்ற இஸ்ரயேலருள் பாரோகின் வழிமரபில் இரமியா, இசியா, மல்கியா, மிய்யாமின், எலியாசர், மல்கியா, பெனாயா ஆகியோர்.
26ஏலாம் வழிமரபில், மத்தானியா, செக்கரியா, எகியேல், அப்தி, ஏரேமோத்து, எலியா ஆகியோர்.
27சத்தூ வழிமரபில், எலியேனாய், எலியாகிபு, மத்தனியா, எலிமோது, சாபாது, அசிசா ஆகியோர்.
28பேபாய் வழிமரபில் யோகனான், அனனியா, சபாய், அத்லாய் ஆகியோர்.
29பானி வழிமரபில், மெசுல்லாம், மல்லூக்கு, அதாயா, யாசூபு, செயால், எரேமேத்து ஆகியோர்.
30பாகாத்மோவாபு வழிமரபில், அத்னா, கெலால், பெனாயா, மாசேயா, மத்தனியா, பெசலேல், பின்னூய், மனாசே ஆகியோர்.
31ஆரிம் வழிமரபில், எலியேசர், இசிய்யா, மல்கியா, செமாயா, சிமியோன்,
32பென்யமின், மல்லூக்கு, செமரியா ஆகியோர்.
33ஆசூம் வழிமரபில், மத்தனாய், மத்தாத்தா, சாபது, எலிப்பலேற்று, எரேமாய், மனாசே, சிமயி ஆகியோர்.
34பானி வழிமரபில், மாகதாய், அம்ராம், ஊவேல்,
35பெனாயா, பேதயா, கெலூகி,
36வானியா, மெரேமோத்து, எலியாசிபு,
37மத்தனியா, மத்தனாய், யகசு ஆகியோர்.
38பின்னூய் வழிமரபில், சிமயி,
39செலேமியா, நாத்தான், அதாயா,
40மாக்னதபாய், சசாய், சாராய்,
41அசரியேல், செலேமியா, செமரியா,
42சல்லூம், அமரியா, யோசேப்பு ஆகியோர்.
43நெபோ வழிமரபில், எயியேல், மத்தித்தியா, சாபது, செபினா, யாதாய், யோவேல், பெனாயா ஆகியோர்.
44வேற்றினப் பெண்களை மணந்திருந்த இவர்கள் அனைவரும் இப்பெண்களையும் அவர்களிடமிருந்து பிறந்த பிள்ளைகளையும் விலக்கிவிட்டனர்.