1கடவுளே, உமது பெயரின்
வல்லமையால்
என்னைக் காப்பாற்றும்;
உமது ஆற்றலினால் எனது
நேர்மையை நிலைநாட்டும்.
2கடவுளே, என் விண்ணப்பத்தைக்
கேட்டருளும்;
என் வாயின் சொற்களுக்குச்
செவிகொடுத்தருளும்.
3ஏனெனில், செருக்குற்றோர்
எனக்கு எதிராய் எழுந்துள்ளனர்;
கொடியவர் என் உயிரைப்
பறிக்கப் பார்க்கின்றனர்;
அவர்கள் கடவுளை
அறவே நினைப்பதில்லை. (சேலா)
4இதோ! கடவுள் எனக்குத்
துணைவராய் இருக்கின்றார்;
என் தலைவர் என் வாழ்வுக்கு
ஆதரவாய் உள்ளோருடன் இருக்கின்றார்;
5என் எதிரிகள் எனக்குச் செய்ய விரும்பும்
தீமையை அவர்கள் மேலேயே அவர்
திருப்பிவிடுவாராக!
‛உம் வாக்குப் பிறழாமைக்கு ஏற்ப
அவர்களை அழித்தொழியும்!
6தன்னார்வத்தோடு உமக்குப்
பலி செலுத்துவேன்;
ஆண்டவரே, உமது பெயருக்கு
நன்றி செலுத்துவேன்; இதுவே நன்று.’
7ஏனெனில், அவர் என்னை
எல்லா இன்னல்களினின்றும்
விடுவித்துள்ளார்;
என் எதிரிகளின் வீழ்ச்சியை நான்
கண்ணாரக் கண்டுள்ளேன்.