“வீழ்ந்தது! வீழ்ந்தது பாபிலோன் மாநகர்!
அவள் பேய்களின் உறைவிடமாக,
அனைத்துத் தீய ஆவிகளின்
பதுங்கிடமாக,
தூய்மையற்ற பறவைகள்
அனைத்தின் புகலிடமாக,
தூய்மையற்ற வெறுக்கத்தக்க
விலங்குகளின் இருப்பிடமாக
மாறிவிட்டாள்.
3அவ்விலைமகளின்
காமவெறி என்னும் மதுவை
எல்லா நாட்டினரும் குடித்தனர்;
மண்ணுலக அரசர்கள் அவளோடு
பரத்தைமையில் ஈடுபட்டார்கள்;
உலகின் வணிகர்கள் அவளுடைய
வளங்களால் செல்வர்கள் ஆனார்கள்.
என் மக்களே,
அந்நகரைவிட்டு வெளியேறுங்கள்,
அவளுடைய பாவங்களில்
பங்கு கொள்ளாதிருக்கவும்
அவளுக்கு நேரிடும் வாதைகளுக்கு
உட்படாதிருக்கவும்
வெளியே போய்விடுங்கள்.
5அவளின் பாவங்கள்
வானைத்தொடும் அளவுக்குக்
குவிந்துள்ளன;
கடவுள் அவளின் குற்றங்களை
நினைவில் கொண்டுள்ளார்.
6அவள் உங்களை நடத்தியவாறே
நீங்களும் அவளை நடத்துங்கள்;
அவளுடைய செயல்களுக்கு ஏற்ப
இரட்டிப்பாகத் திருப்பிக் கொடுங்கள்;
அவள் உங்களுக்குக் கலந்து கொடுத்த
மதுவுக்குப் பதிலாக
இரு மடங்கு கொடுங்கள்.
7அவள் தன்னையே பெருமைப்படுத்தி
இன்பம் துய்த்து வாழ்ந்ததற்கு ஏற்ப
அவள் வேதனையுற்றுத்
துயரடையச் செய்யுங்கள்.
ஏனெனில், 'நான் அரசியாக
வீற்றிருக்கிறேன்;
நான் கைம்பெண் அல்ல;
நான் ஒருபோதும் துயருறேன்' என்று
அவள் தன் உள்ளத்தில்
சொல்லிக்கொண்டாள்.
8இதன்பொருட்டுச் சாவு, துயரம், பஞ்சம்
ஆகிய வாதைகள் ஒரே நாளில்
அவள்மீது வந்து விழும்;
நெருப்பு அவளைச் சுட்டெரித்துவிடும்;
ஏனெனில், அவளுக்குத்
தீர்ப்பு வழங்கும் ஆண்டவராகிய கடவுள்
வலிமை வாய்ந்தவர்.”
“ஐயோ! மாநகரே நீ கேடுற்றாயே!
அந்தோ! வலிமை வாய்ந்த பாபிலோனே
உனக்குக் கேடு வந்ததே!
ஒரே மணி நேரத்தில்
உனக்குத் தீர்ப்பு வந்துவிட்டதே.”
14“நீ விரும்பிய கனிகள்
உன்னைவிட்டு அகன்றுபோயின;
உன் மினுக்கு, பகட்டு எல்லாம்
ஒழிந்துபோயின;
இனி யாரும் அவற்றைக்
காணப் போவதில்லை”
16“ஐயோ, மாநகரே, நீ கேடுற்றாயே!
விலையுயர்ந்த மெல்லிய ஆடையும்
செந்நிற கருஞ்சிவப்பு உடையும் அணிந்து,
பொன், விலையுயர்ந்த கல், முத்துகளால்
அணிசெய்து கொண்டவளே!
அந்தோ! உனக்குக் கேடு வந்ததே!
17இவ்வளவு செல்வமும்
ஒரே மணி நேரத்தில்
பாழாய்ப் போய்விட்டதே”
“ஐயோ, மாநகரே, நீ கேடுற்றாயே!
கடலில் கப்பலோட்டிய அனைவரையும்
தன் செல்வச் செழிப்பால்
செல்வராக்கிய நீ
ஒரே மணிநேரத்தில்
பாழடைந்து விட்டாயே!”
20“விண்ணகமே, இறைமக்களே,
திருத்தூதர்களே, இறைவாக்கினர்களே,
அவளைமுன்னிட்டு
மகிழ்ந்து கொண்டாடுங்கள்;
கடவுள் உங்கள் சார்பாக
அவளுக்குத் தண்டனைத் தீர்ப்பு
வழங்கிவிட்டார்.
“பாபிலோன் மாநகரே,
நீ இவ்வாறு வீசி எறியப்படுவாய்;
நீ இருந்த இடம் தெரியாமல்
அழிந்து விடுவாய்.
22யாழை மீட்டுவோர், பாடகர்,
குழல் ஊதுவோர்,
எக்காளம் முழக்குவோர்
ஆகியோர் எழுப்பும் இசை
இனி உன் நடுவே எழவே எழாது;
தொழில் செய்யும் கைவினைஞர்
அனைவரும் இனி உன் நடுவே
குடியிருக்கவே மாட்டார்கள்;
எந்திரக்கல் எழுப்பும் ஒலி
இனி உன் நடுவே எழவே எழாது.
23விளக்கின் ஒளி இனி உன்னகத்தே
ஒளிரவே ஒளிராது;
மணமக்களின் மங்கல ஒலி
இனி உன்னகத்தே எழவே எழாது;
ஏனெனில், உன் வணிகர்கள்
மண்ணுலகில் பெருங்குடி மக்களாய்
விளங்கினார்கள்;
உன் பில்லிசூனியம்
எல்லா நாடுகளையும் ஏமாற்றிவிட்டது.
24இறைவாக்கினர்கள், இறைமக்களின்
இரத்தக்கறையும்,
ஏன், மண்ணுலகில் கொல்லப்பட்ட
அனைவருடைய இரத்தக்கறையுமே
அவளிடம் காணப்பட்டது.”