செக்கரியா முன்னுரை


செக்கரியா நூலை இருபெரும் பகுதிகளாகப் பிரிக்கலாம். முதற் பகுதி: 1-8 அதிகாரங்கள். இப்பகுதி கி.மு. 520 முதல் 518 வரையுள்ள காலத்தைச் சார்ந்தது. இதில் எட்டுக் காட்சிகள் அடங்கியுள்ளன. எருசலேமின் மீட்பு, கோவில் மீண்டும் கட்டியெழுப்பப்படும் என்ற வாக்குறுதி, இறைமக்கள் தூய்மைப்படுத்தப்படுவர் என்ற அறிவிப்பு, மெசியாவின் வருங்கால ஆட்சி ஆகியன சிறப்பாக எடுத்துரைக்கப்படுகின்றன. இரண்டாம் பகுதி: 9-14 அதிகாரங்கள். இப்பகுதியில் அடங்கியுள்ள குறிப்புகள் அனைத்தும் பிற்காலத்தைச் சேர்ந்தவை. இப்பகுதி மெசியாவைப் பற்றியும் இறுதித் தீர்ப்பைப் பற்றியும் எடுத்துரைக்கின்றது (9:9).

நூலின் பிரிவுகள்

  1. எச்சரிப்பும் நல்லன குறித்த அறிவிப்பும் 1:1 - 8:23
  2. வேற்றினத்தாருக்கு வரும் தண்டனைத் தீர்ப்பு 9:1 - 8
  3. வருங்கால வாழ்வும் செழுமையும் 9:9 - 14:21