1ஆண்டவரின் வாக்கு எனக்கு
அருளப்பட்டது:
2மானிடா! காட்டிலிருக்கும்
எல்லா மரக்கிளைகளையும் விட
திராட்சைக் கொடி
எவ்வகையில் சிறந்தது?
3ஏதாவது வேலை செய்ய அதிலிருந்து
கட்டை எடுக்கப்படுகிறதா?
அல்லது ஏதாவது பாண்டம் தொங்கவிட
ஒரு முளையை அதிலிருந்து
செய்வார்களா?
4இதோ, அது நெருப்புக்கு
இரையாகப் போடப்படுகிறது;
அதன் இரு முனைகளையும்
நெருப்பு எரிக்கிறது;
அதன் நடுப்பகுதி கருகிப்போகிறது;
அது எந்த வேலைக்காவது பயன்படுமா?
5இதோ, அது
முழுமையாய் இருந்தபோதே
அதைக்கொண்டு ஒரு வேலையும்
செய்யமுடியவில்லை.
நெருப்பால் எரிந்து கருகிய அதை
எந்த வேலைக்காவது
பயன்படுத்த முடியுமா?