1அந்நாளில் ஓர் ஆடவனை ஏழு

பெண்கள் பிடித்துக்கொண்டு,

‟நாங்கள் எங்கள் சொந்த உணவை

உண்டு வாழ்வோம்;

எங்கள் சொந்த ஆடைகளை

உடுத்திக்கொள்வோம்;

உமது பெயரை மட்டும்

எங்களுக்கு வழங்கி எங்கள்

இழிவை நீக்குவீராக” என்பார்கள்.

எருசலேமின் மறுவாழ்வு

2அந்நாளில் ஆண்டவரால்

துளிர்க்கும் தளிர்,

அழகும் மேன்மையும்

வாய்ந்ததாய் இருக்கும்;

நாட்டில் விளையும் நற்கனிவகைகள்,

இஸ்ரயேலில் தப்பிப் பிழைத்தவர்களின்

பெருமையும் மேன்மையுமாய் அமையும்.

3அந்நாளில் சீயோனில் எஞ்சியிருப்போரும்,

எருசலேமில் தப்பி வாழ்வோரும்

‛புனிதர்’ எனப் பெயர் பெறுவர்;

உயிர் பிழைப்பதற்கென்று

எருசலேமில் பெயர் எழுதப்பட்டோரும்

‛புனிதர்’ எனப்படுவர்.

4என் தலைவர் சீயோன் மகளின் தீட்டைக்

கழுவித் தூய்மைப்படுத்துவார்;

நீதியின்படி தீர்ப்பிடும்

அவரது தன்மையாலும்

நெருப்புத்தணலையொத்த

அவரது ஆற்றலாலும்

எருசலேமின் இரத்தக் கறைகளைக் கழுவி

அதனைத் தூய்மைப்படுத்துவார்.

5சீயோன் மலையின் முழுப்பரப்பின் மேலும், அங்கே கூடிவரும் சபைக் கூட்டங்கள் மேலும், மேகத்தை ஆண்டவர் பகலில் தோற்றுவிப்பார்; புகைப்படலத்தையும், கொழுந்து விட்டெரியும் நெருப்பின் ஒளிச் சுடரையும் இரவில் ஏற்படுத்துவார்; ஏனெனில், அனைத்து மாட்சிக்கு மேல் ஒரு விதான மண்டபம் இருக்கும்.
6அது பகல் வெப்பத்தினின்று காக்கும் நிழலாகவும், புயல்காற்றுக்கும் மழைக்கும் ஒதுங்கும் புகலிடமாகவும் அரணாகவும் அமையும்.

4:5 விப 13:21; 24:16.