புகழ்ச்சிப் பாடல்

1வாருங்கள்; ஆண்டவரைப்

புகழ்ந்து பாடுங்கள்;

நமது மீட்பின் பாறையைப்

போற்றி ஆர்ப்பரியுங்கள்.

2நன்றியுடன் அவர் திருமுன் செல்வோம்;

புகழ்ப் பாக்களால் அவரைப்

போற்றி ஆர்ப்பரிப்போம்.

3ஏனெனில், ஆண்டவர்

மாண்புமிகு இறைவன்;

தெய்வங்கள் அனைத்திற்கும்

மேலான பேரரசர்.

4பூவுலகின் ஆழ்பகுதிகள்

அவர்தம் கையில் உள்ளன;

மலைகளின் கொடுமுடிகளும்

அவருக்கே உரியன.

5கடலும் அவருடையதே;

அவரே அதைப் படைத்தார்;

உலர்ந்த தரையையும்

அவருடைய கைகளே உருவாக்கின.

6வாருங்கள்; தாள்பணிந்து

அவரைத் தொழுவோம்;

நம்மை உருவாக்கிய ஆண்டவர்முன்

முழந்தாளிடுவோம்.

7அவரே நம் கடவுள்;

நாமோ அவரது மேய்ச்சலின் மக்கள்;

நாம் அவர் பேணிக்காக்கும் ஆடுகள்.

இன்று நீங்கள் அவரது குரலுக்குச்

செவிகொடுத்தால் எத்துணை நலம்!

8அன்று மெரிபாவிலும், பாலை நிலத்தில்

மாசாவிலும் செய்ததுபோல்,

உங்கள் இதயத்தைக்

கடினப்படுத்திக் கொள்ளாதீர்கள்.

9அங்கே உங்கள் மூதாதையர்

என்னைச் சோதித்தனர்;

என் செயல்களைக் கண்டிருந்தும்

என்னைச் சோதித்துப் பார்த்தனர்.

10நாற்பது ஆண்டளவாய்

அந்தத் தலைமுறை

எனக்கு வெறுப்பூட்டியதால்,

நான் உரைத்தது: ‛அவர்கள்

உறுதியற்ற உள்ளம் கொண்ட மக்கள்;

என் வழிகளை அறியாதவர்கள்’.

11எனவே, நான் சினமுற்று,

‛நான் அளிக்கும்

இளைப்பாற்றியின் நாட்டிற்குள்

நுழையவே மாட்டார்கள்’ என்று

ஆணையிட்டுக் கூறினேன்.


95:7-8 எபி 3:15; 4:7. 95:7-11 எபி 3:7-11. 95:8-9 விப 17:1-7; எண் 20:2-13. 95:11 எண் 14:20-23; இச 1:34-36; 12:9-10; எபி 4:3-5.