1ஆண்டவர் ஆட்சி செய்கின்றார்;
அவர் மாட்சியை ஆடையாய்
அணிந்துள்ளார்;
ஆண்டவர் வல்லமையைக்
கச்சையாகக் கொண்டுள்ளார்;
பூவுலகை அவர் நிலைப்படுத்தினார்;
அது அசைவுறாது.
2உமது அரியணை தொடக்கத்திலிருந்தே
நிலைபெற்றள்ளது;
நீர் தொன்றுதொட்டே நிலைத்துள்ளீர்.
3ஆண்டவரே! ஆறுகள் குதித்தெழுந்தன;
ஆறுகள் இரைச்சலிட்டன;
ஆறுகள் ஆரவாரம் செய்தன.
4பெருவெள்ளத்தின் இரைச்சலையும்
கடலின் ஆற்றல்மிகு பேரலைகளையும்விட
ஆண்டவர் வலிமை மிக்கவர்;
அவரே உன்னதத்தில் உயர்ந்தவர்.
5உம்முடைய ஒழுங்குமுறைகள்
மிகவும் உறுதியானவை;
ஆண்டவரே! என்றென்றும் தூய்மையே
உமது இல்லத்தை அழகு செய்யும்.