1நகரின் அடித்தளம்
திருமலைகளின்மீது
அமைந்துள்ளது.
2யாக்கோபின் உறைவிடங்கள்
அனைத்தையும்விட
ஆண்டவர் சீயோன் நகர வாயில்களை
விரும்புகின்றார்.
3கடவுளின் நகரே! உன்னைப்பற்றி
மேன்மையானவை
பேசப்படுகின்றன. (சேலா)
4எகிப்தையும் பாபிலோனையும்
என்னை அறிந்தவைகளாகக் கொள்வேன்;
பெலிஸ்தியர், தீர் மற்றும் எத்தியோப்பியா
நாட்டினரைக் குறித்து,
‛இவர்கள் இங்கேயே
பிறந்தவர்கள்’ என்று கூறப்படும்.
5‛இங்கேதான் எல்லாரும் பிறந்தனர்;
உன்னதர்தாமே அதை
நிலைநாட்டியுள்ளார்!’ என்று
சீயோனைப்பற்றிச் சொல்லப்படும்.
6மக்களினங்களின் பெயர்களைப்
பதிவு செய்யும்போது,
‛இவர் இங்கேதான் பிறந்தார்’ என
ஆண்டவர் எழுதுவார். (சேலா)
7ஆடல் வல்லாருடன்
பாடுவோரும் சேர்ந்து
‛எங்கள் நலன்களின் ஊற்று
உன்னிடமே உள்ளது;
எல்லாரின் உறைவிடமும்
உன்னிடமே உள்ளது’ என்பர்.