நீதி வழங்கும் கடவுள்
(பாடகர் தலைவர்க்கு: ‘அழிக்காதே’ என்ற மெட்டு; ஆசாபின் புகழ்ப்பாடல்)

1உமக்கு நன்றி

செலுத்துகின்றோம்;

கடவுளே, உமக்கு

நன்றி செலுத்துகின்றோம்;

உமது பெயரைப் போற்றுகின்றோம்;

உம் வியத்தகு செயல்களை

எடுத்துரைக்கின்றோம்.

2நான் தகுந்த வேளையைத்

தேர்ந்துகோண்டு,

நீதியோடு தீர்ப்பு வழங்குவேன்.

3உலகமும் அதில் வாழ்வோர் அனைவரும்

நிலைகுலைந்து போகலாம்;

ஆனால், நான் அதன் தூண்களை

உறுதியாக நிற்கச் செய்வேன். (சேலா)

4வீண் பெருமை கொள்வோரிடம்,

‛வீண் பெருமை கொள்ள வேண்டாம்’
எனவும் பொல்லாரிடம்,

‛உங்கள் வலிமையைக் காட்ட வேண்டாம்;

5உங்கள் ஆற்றலைச் சிறிதளவும்

காட்டிக்கொள்ள வேண்டாம்;

தலையை ஆட்டி இறுமாப்புடன்

பேச வேண்டாம்;’ எனவும் சொல்வேன்.

6கிழக்கிலிருந்தோ மேற்கிலிருந்தோ,

பாலைவெளியிலிருந்தோ,
மலைகளிலிருந்தோ,

உங்களுக்கு எதுவும் வராது.

7ஆனால், கடவுளிடமிருந்தே

தீர்ப்பு வரும்; அவரே

ஒருவரைத் தாழ்த்துகின்றார்;

இன்னொருவரை உயர்த்துகின்றார்.

8ஏனெனில், மதிமயக்கும்

மருந்து கலந்த திராட்சை மது

பொங்கிவழியும் ஒரு பாத்திரம்

ஆண்டவர் கையில் இருக்கின்றது;

அதிலிருந்து அவர்

மதுவை ஊற்றுவார்;

உலகிலுள்ள பொல்லார் அனைவரும்

அதை முற்றிலும்

உறிஞ்சிக் குடித்துவிடுவர்.

9நானோ எந்நாளும் மகிழ்ந்திருப்பேன்;

யாக்கோபின் கடவுளைப்

புகழ்ந்து பாடுவேன்;

10பொல்லாரை அவர்

வலிமை இழக்கச் செய்வார்;

நேர்மையாளரின் ஆற்றலோ

உயர்வுபெறும்.