இறைப்பற்று இல்லார்
(பாடகர் தலைவர்க்கு: ‘நோயுற்று’ என்ற மெட்டு; தாவீதின் அறப்பாடல்)
(திபா 14)

1‛கடவுள் இல்லை’ என

அறிவிலிகள் தம் உள்ளத்தில்

சொல்லிக் கொள்கின்றனர்;

அவர்களுள் சிலர் கெட்டு

அருவருப்பான செயல்களில்
ஈடுபடுகின்றனர்;

நல்லது செய்வார் யாரும் இல்லை.

2கடவுள் விண்ணகத்தினின்று

மானிடரை உற்றுநோக்குகின்றார்;

மதிநுட்பமுள்ளவர், கடவுளை நாடுபவர்

எவராவது உண்டோ என்று

பார்க்கின்றார்.

3எல்லோரும் நெறிபிறழ்ந்தனர்;

ஒருமிக்கக் கெட்டு போயினர்;

நல்லது செய்வார் யாரும் இல்லை;

ஒருவர் கூட இல்லை.

4‛தீங்கிழைக்கும் யாவரும்

அறிவை இழந்துவிட்டார்களோ?

உணவை விழுங்குவதுபோல்

என் மக்களை

விழுங்கப் பார்க்கின்றார்களே!’
இவர்கள் கடவுளை நோக்கி

மன்றாடுவதுமில்லை;

5எனவே, அவர்கள்

இதுவரை கண்டிராத முறையில்

பேரச்சத்தால் நடுநடுங்குவர்;

இறைமக்களை ஒடுக்கியோரின்

எலும்புகளைக் கடவுள் சிதறடிப்பார்;

கடவுள் அவர்களைக் கைவிட்டதால்

அவர்கள் மானக்கேடு அடைவர்.

6சீயோனிலிருந்து

இஸ்ரயேலருக்கு மீட்பு வருவதாக!

கடவுள் தம் மக்களுக்கு மீண்டும்

வளமான வாழ்வை அருளும்போது,

யாக்கோபின் இனத்தார் களிகூர்வராக!

இஸ்ரயேல் மக்கள் அகமகிழ்வராக!


53:1-3 உரோ 3:10-12.