1கடவுளே, என் நேர்மையை
நிலைநாட்டும்;
இறைப்பற்றில்லா இனத்தோடு
என் வழக்குக்காக வாதிடும்;
வஞ்சகமும் கொடுமையும் நிறைந்த
மனிதர் கையினின்று
என்னை விடுவித்தருளும்.
2ஏனெனில் கடவுளே! நீரே என் ஆற்றல்;
ஏன் என்னை ஒதுக்கித் தள்ளிவிட்டீர்?
எதிரியால் ஒடுக்கப்பட்டு,
நான் ஏன் துயருடன் நடமாடவேண்டும்?
3உம் ஒளியையும் உண்மையையும்
அனுப்பியருளும்;
அவை என்னை வழி நடத்தி,
உமது திருமலைக்கும்
உமது உறைவிடத்திற்கும்
கொண்டுபோய்ச் சேர்க்கும்.
4அப்பொழுது, நான்
கடவுளின் பீடம் செல்வேன்;
என் மன மகிழ்ச்சியாகிய
இறைவனிடம் செல்வேன்;
கடவுளே! என் கடவுளே!
யாழிசைத்து ஆர்ப்பரித்து
உம்மைப் புகழ்ந்திடுவேன்.
5என் நெஞ்சே! நீ நம்பிக்கை இழப்பது ஏன்?
நீ கலக்கமுறுவது ஏன்?
கடவுளையே நம்பியிரு;
என் கடவுளின் மீட்புச் செயல்களை முன்னிட்டு
இன்னும் நான் அவருக்கு
நன்றி செலுத்துவேன்.