சகோதர அன்பின் சிறப்பு
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல், தாவீதுக்கு உரியது)

1சகோதரர் ஒன்றுபட்டு வாழ்வது

எத்துணை நன்று,

எத்துணை இனியது!

2அது ஆரோனின் தலையினிலே

ஊற்றப் பெற்ற நறுமணத்தைலம்

அவருடைய தாடியினின்று வழிந்தோடி

அவர்தம் அங்கியின் விளிம்பை

நனைப்பதற்கு ஒப்பாகும்.

3அது எர்மோனின் மலைப்பனி

சீயோனின் மலைகள்மேல்

இறங்குவதற்கு ஒப்பாகும்;

ஏனெனில், அங்கிருந்தே என்றுமுள

வாழ்வென்னும் ஆசிதனை

ஆண்டவர் பொழிந்தருள்வார்.