கடவுளின் அருளும் நலன்களும்
(சீயோன்மலைத் திருப்பயணப் பாடல்; சாலமோனுக்கு உரியது)

1ஆண்டவரே வீட்டைக்

கட்டவில்லையெனில்,

அதைக் கட்டுவோரின்

உழைப்பு வீணாகும்;

ஆண்டவரே நகரைக்

காக்கவில்லையெனில்,

காவலர்கள் விழித்திருப்பதும்

வீணாகும்.

2வைகறையில் விழித்தெழுந்து

நள்ளிரவில் ஓய்வெடுக்கும்வரை

மானிடர் தம் உணவுக்காக

வருந்தி உழைப்பது வீணே!

உறங்கும்போதும் கடவுளின் அன்பர்

தேவையானதை அவரிடமிருந்து

பெற்றுக்கொள்வர்.

3பிள்ளைகள், ஆண்டவர் அருளும் செல்வம்;

மக்கட்பேறு, அவர் அளிக்கும் பரிசில்.

4இளமையில் ஒருவருக்குப்

பிறக்கும் மைந்தர்

வீரரின் கையிலுள்ள

அம்புகளுக்கு ஒப்பானவர்.

5அவற்றால் தம் அம்பறாத் தூணியை

நிரப்பிய வீரர் நற்பேறு பெற்றோர்;

நீதிமன்றத்தில் எதிரிகளோடு

வழக்காடும்போது

அவர் இகழ்ச்சியடையமாட்டார்.