ஆண்டவரைப் போற்றுதல்

1அல்லேலூயா! நெஞ்சார

ஆண்டவருக்கு

நன்றி செலுத்துவேன்;

நீதிமான்களின் மன்றத்திலும் சபையிலும்

அவருக்கு நன்றி செலுத்துவேன்.

2ஆண்டவரின் செயல்கள் உயர்ந்தவை;

அவற்றில் இன்பம் காண்போர்

அனைவரும் அவற்றை ஆய்ந்துணர்வர்.

3அவரது செயல்

மேன்மையும் மாண்பும் மிக்கது;

அவரது நீதி என்றென்றும்

நிலைத்துள்ளது.

4அவர் தம் வியத்தகு செயல்களை என்றும்

நினைவில் நிலைக்கச் செய்துள்ளார்;

அருளும் இரக்கமும் உடையவர் ஆண்டவர்.

5அவர் தமக்கு அஞ்சி நடப்போர்க்கு

உணவு அளிக்கின்றார்;

தமது உடன்படிக்கையை

என்றும் நினைவில் கொள்கின்றார்;

6வேற்றினத்தாரின் உரிமைச் சொத்தைத்

தம் மக்களுக்கு அளித்தார்;

இவ்வாறு ஆற்றல்மிக்க தம் செயல்களை

அவர்களுக்கு வெளிப்படுத்தினார்.

7அவர்தம் ஆற்றல்மிகு செயல்கள்

நம்பிக்கைக்குரியவை; நீதியானவை;

அவர்தம் கட்டளைகள் அனைத்தும்

நிலையானவை.

8என்றென்றும் எக்காலமும்

அவை நிலைமாறாதவை;

உண்மையாலும் நீதியாலும்

அவை உருவானவை.

9தம் மக்களுக்கு அவர் மீட்பை அளித்தார்;

தம் உடன்படிக்கை

என்றென்றும் நிலைக்குமாறு செய்தார்;

அவரது திருப்பெயர் தூயது;

அஞ்சுதற்கு உரியது.

10ஆண்டவர்பற்றிய அச்சமே

ஞானத்தின் தொடக்கம்;

அவர்தம் கட்டளைகளைக்

கடைப்பிடிப்போர் நல்லறிவுடையோர்;

அவரது புகழ்

என்றென்றும் நிலைத்துள்ளது.


111:10 யோபு 28:8; நீமொ 1:7;9:10.