1ஆண்டவர் என் தலைவரிடம்,
‛நான் உம் பகைவரை
உமக்குப் கால்மணையாக்கும்வரை
நீர் என் வலப்பக்கம் வீற்றிரும்’
என்று உரைத்தார்.
2வலிமைமிகு உமது செங்கோலை
ஆண்டவர் சீயோனிலிருந்து
ஒங்கச் செய்வார்;
உம் எதிரிகளிடையே ஆட்சி செலுத்தும்!
3நீர் உமது படைக்குத்
தலைமை தாங்கும் நாளில்
தூய கோலத்துடன் உம் மக்கள்
தம்மை உவந்தளிப்பர்;
வைகறை கருவுயிர்த்த பனியைப்போல
உம் இளம் வீரர் உம்மை வந்தடைவர்.
4‛மெல்கிசெதேக்கின் முறைப்படி
நீர் என்றென்றும் குருவே’ என்று
ஆண்டவர் ஆணையிட்டுச்
சொன்னார்; அவர் தம் மனத்தை
மாற்றிக் கொள்ளார்.
5என் தலைவர்
உம் வலப்பக்கத்தில் உள்ளார்;
தம் சினத்தின் நாளில்
மன்னர்களை நொறுக்குவார்.
6வேற்று நாடுகளுக்கு அவர் தீர்ப்பளித்து
அவற்றைப் பிணத்தால் நிரப்புவார்;
பாருலகெங்கும் தலைவர்களை
அவர் நொறுக்குவார்.
7வழியில் உள்ள நீரோடையிலிருந்து
அவர் பருகுவார்;
ஆகவே அவர் தலைநிமிர்ந்து நிற்பார்.