:: அருட்பணியாளர் ஆண்டுக்கான மன்றாட்டு ::
ஓ நித்திய குருவாகிய இயேசுவே, உமது ஊழியர்களாகிய அருட்பணியாளர்களை (பெயர்....) , உமது திருஇதயத்தில் வைத்து பாதுகாத்தருளும். உமது திருவுடலையேந்தும் அவர்கள் கைகள் கறைபடாதபடியும், விலைமதிக்கப்படாத உமது திருஇரத்தத்தை பருகும் அவர்களது உதடுகள் மாசு அணுகாதபடியும் அர்ச்சித்தருளும். உமது குருத்துவத்தின் முத்திரையால் அவர்களது இதயங்களை தூய்மைப்படுத்தியருளும். அவர்களை உமது தூய அன்பாலும், தூய ஆவியின் அருட்கொடைகளாலும், வரங்களாலும் கனிகளாலும் நிரப்பியரும். அவர்களது திருப்பணியை ஆசீர்வதித்து, அதன் பலனை மிகுதியாக்கியருளும். ஆமென்.